தமிழகத்தில் 4 கோவில்களில் ஆக்கிரமிப்புகளில் உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கோயில்களின் ஆக்கிரமிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1097 புராதன இடங்கள் மத்திய அரசால் நினைவுச்சின்னங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம் (135), கர்நாடகா (506), கேரளா (29), புதுச்சேரி-யுடி (07), தமிழ்நாடு (412) மற்றும் தெலுங்கானா (08) ஆகிய 1097 இடங்கள் உள்ளது. இவற்றில் 448 கோவில்கள் உள்ளது.
இதில் தமிழகத்தில் 412 கோயில்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரத்தின் தென்னேரி ஆபத்சஹோயேஸ்வரர் கோவில், திருச்சி எரும்பீஸ்வரர் சுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள ஐராதீஸ்வரர் கோவில் ஆகியவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நோட்டீஸ் பிறப்பித்தும், இடித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…