காவல் அதிகாரி வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 4 பெண்கள்!வளைத்து பிடித்த அக்கம்பக்கத்தினர்!

Published by
Sulai

திருப்பூரில் கோர்ட் ரோடு முதல் வீதியில் காவல்துறை குடியிருப்பு உள்ளது.அதில் காவலர்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றன.அங்கு ஜெ பிளாக்கில் மாநகர ஆயுத படை பிரிவில் பணியாற்றும் சேதுபதி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி மதியம் சேதுபதியின் மனைவி கனகா வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது அவரின் படுக்கை அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

என்ன சத்தம் இது என்று பார்க்க கனகா படுக்கை அறைக்கு வந்துள்ளார்.அப்போது அங்கு 4 பெண்கள் பீரோவை தொறந்து அதில் இருந்த துணியை ஒரு பையில் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அதை பார்த்த கனகா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார்.பின்னர் அந்த பெண்கள் அவரை தள்ளி விட்டுவிட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அந்த பெண்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.பின்னர் அவர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் திருப்பூரில் உள்ள வீரபாண்டிபுரம்  அருகே உள்ள பறந்து பாளையத்தைச் சேர்ந்த ராணி,செல்வி,சந்தியா மற்றும் பவானி என தெரியவந்துள்ளது.

பின்னர் திருட முயன்றதால் அந்த பெண்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 minutes ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

12 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

19 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

1 hour ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago