தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா.! 5 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. உயிரிழப்பின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 9,674 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,108 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 310 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. இன்று 359 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 3,03,104 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 11,672 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 434 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 434 பேரில் ஆண்கள் 253 பேர், பெண்கள் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 7,435 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட 434 பேரில் 49 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

32 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

1 hour ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

2 hours ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

3 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago