Chennai flood Relief - Tamilnadu CM MK Stalin [File Image ]
மிக்ஜாம் புயல் புயல் – கனமழையால் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இன்னும் வெகு சில இடங்களில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது. அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது.
கனமழை பாதிப்பு.! ரேஷன் கார்டுக்கு ரூ.6000 நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!
ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தலா 6000 ரூபாய் பெரும்பாலும் வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் கார்டு இல்லாமல் சென்னை சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கும் நிவாரண உதவிதொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருந்தது.
ரேஷன் கார்டு இல்லாமல் சென்னை சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர் அருகில் உள்ள ரேஷன் கடையில் விண்ணப்பம் பெற்று நிரப்ப வேண்டும். அதன் பிறகு அரசு ஊழியர்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து நிவாரண தொகை அளிப்பார்கள் என கூறப்பட்டு இருந்தது.
அதன்படி, சென்னையில் வசிப்போர் இதுவரை 4.9 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேரும், செங்கல்பட்டில் 14 ஆயிரம் பேரும் , திருவள்ளூரில் 22 ஆயிரம் பேரும் என மொத்தமாக 5.5 லட்சம் பேர் ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரண தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச…
வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக…
கோவா : ஜூலை 9 அன்று, கோவா அமைச்சரவை, ராட்வீலர் மற்றும் பிட்புல்ஸ் உள்ளிட்ட “கொடூரமான” நாய் இனங்களின் இறக்குமதி,…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…