[Image source : REUTERS]
ஒடிசா விபத்தில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக 50 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றதாகவும், தற்போது ரயில்வே சீரமைப்பு பணிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து பற்றி அறிந்தவுடன், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனை தொடர்ந்து, விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. 250 தமிழர்கள் ஒடிசாவில் இருந்து தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என ரயில்வே எஸ்பி பொன்ராம் விளக்கம் அளித்து இருந்தார். தற்போது முதற்கட்டமாக 50 பேர் ஒடிசாவில் இருந்து விமானம் மூலம் தற்போது சென்னை வந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…