கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதில் அவருக்கு திருமணம் ஆகி கடந்த 9 ஆண்டுகள் ஆகியதாகவும் அவரும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் தற்போது அவர் சென்னையில் உள்ள கிண்டியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.இவருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றும் கிசோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அதுவே பலமாகி காதலாக உருமாறியுள்ளது.அவரை கிசோர் திருமணம் செய்து கொல்வதாக கூறியதால் அவருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சுற்றியதாகவும் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அவரை அழைத்து சென்று கிசோர் ,உடலுறவு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது கிசோர் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.மேலும் அவர்கள் தனியாக இருந்த போது அவருக்கு தெரியாமலேயே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்ததாகவும் அதை அவரிடம் காட்டி 56 லட்சம் பணம் பறித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கிஸோரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு புகைப்படங்களையும் வீடியோவையும் இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மனம் நொந்த அந்த பெண் கிஸோரிடம் உள்ள பணத்தையும் வீடியோவையும் பறிமுதல் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…