மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்.
கடந்த 26ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா குறித்த தகவலை மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக இம்தியாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி வசீம் அக்ரமை வழிமறித்து, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை அழைத்து வந்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வகுமார் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…