அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் 2வது நாளான இன்று சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுக தான் முழு காரணம். காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும் ஆவேசமாக தெரிவித்தார். இதையடுத்து, தற்போது சட்டப்பேரவையில் மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. இதில், மருத்துவம், பல் மருத்துவம், ஓமியோபதி, இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…