[File Image]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி எனும் ஊரை சேந்த ராஜ்குமார் என்பவர் , சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது வங்கி கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் இந்த குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை அப்போது எதோ தவறுதலாக செய்தி வந்துள்ளளது என நினைத்துள்ளார் ராஜ்குமார். அதன் பிறகு சோதனை செய்வதற்காக தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
அப்போது அந்த பண பரிவர்த்தனை நடைபெற்ற பிறகு தான் தனது அக்கவுண்டில் 9000 கோடி ரூபாய் வந்து சேர்ந்துள்ளதை ராஜ்குமார் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து வங்கி கிளை அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கிக்கு நேரடியாக வந்து பேச அழைத்துள்ளது. அதன் பிறகு மறுநாள் காலையில் வங்கிக்கு சென்றுள்ளார் வாகன ஓட்டுநர் ராஜ்குமார்.
அப்போது தவறுதலாக நடைபெற்ற இந்த பணபரிவார்த்தணை பற்றி ராஜ்குமாரிடம் வங்கி அதிகாரிகள் விளக்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் கூற வேண்டாம் என கூறி, செலவு செய்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டாம் எனவும் வங்கி அதிகாரிகள் தரப்பு கூறப்பட்டதாக தெரிகிறது. மேலும், அவருக்கு வாகன கடன் உதவியும் செய்வதாக வங்கி அதிகாரிகள் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…