[file image]
செப்.9-ம் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி இயக்கமாக வேகமாக உருவெடுத்து வருகிறது. வரும் தேர்தலிலேயே களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் தொடர்ந்து பல்வேறு அணிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சமயத்தில், சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில், மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செப்.9-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட மகளிர் அணி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார். சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…
பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…