கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி ஆவார்.இவரது கணவர் மாதேஷ் ஆவார்.இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றன.நந்தினிக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நந்தினி கள்ளக்காதலன் வேலைக்கு சென்றவுடன் மற்றொரு கள்ளக்காதலானுடன் இணைந்து மது அருந்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் உல்லாசம் அனுபவித்து கொண்டு இருக்கும் போது குழந்தை நயனாஸ்ரீ தொடர்ந்து அழுது தொந்தரவு செய்துள்ளது.இதனால் கடுப்பான இருவரும் குழந்தை மீதுள்ள ஆத்திரத்தில் மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.
பின்னர் பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக அடித்து கொடுமை படுத்தியுள்ளனர்.குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
அப்போது தரையில் சுருண்டு கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் அவர்கள் குழந்தையை எடுத்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது.
இதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.அப்போது சிகிச்சை பெற்ற சிறுமி அம்மா அம்மா என்று வலி தாங்கமுடியாமல் முனங்கியது கண்ட அனைவரையும் கண் களங்கச்செய்துள்ளது.
இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய குழந்தையின் தாய் நந்தினியையும் அவரது இரண்டாவது கள்ளக்காதலனையும் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் தாய் தனது முதல் கள்ளக்காதலனுடன் மருத்துவமனைக்கு வந்து போதையில் தள்ளாடியபடி காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார்.இந்நிலையில் பெற்ற தாயே தனது குழந்தைக்கு செய்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…