திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக பரமக்குடியில் பெண் ஒருவர் நாக்கை அறுத்து நேர்த்திகடன் செலுத்தினார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டுள்ளார்.
அதனால்,பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் இன்று காலை வனிதா தனது நாக்கினை அறுத்துக் கொண்டு,கொரோனா காரணமாக கோவில் திறக்காததால் அக்கோவில் வாசலிலே நாக்கை வைத்து நேர்த்திகடனை செலுத்தியுள்ளார்.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வனிதாவை மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…