பதிவு துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, 20 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வணிக வரித்துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வரி செலுத்துவதற்கான போலி பட்டியல் தயாரிப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய சட்ட திருத்தும் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது.
வணிக நல வாரிய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் கூடுதலாக திருமண உதவி மற்றும் விபத்து இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பதிவு துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திங்கட்கிழமை தோறும் குறை தீர்க்கும் முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள 20 அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…