தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Published by
மணிகண்டன்

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. – தேர்தல் ஆணையம்.

கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு இருந்தார். இவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட பாஜக பிரமுகர் சசிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில் மாணிக்கம் தாகூரின் கட்சியினர், அவரது கூட்டணி கட்சி முகவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி சீனி, கருப்பையா, காமராஜ் மீது மதுரை, விருதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் தொடர்புடைய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், இன்னும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணப்பட்டுவாடா நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் புகார் தொடர்பான மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இதனை ஏற்று இந்த வழக்கானது முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா.? மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா.? அப்படி தள்ளுபடி செய்யப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுகள் தெரிந்து விடும்.

 

 

 

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

6 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

6 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

6 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

7 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

8 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

8 hours ago