23 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு திருவிழா.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழியில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு சாமியின் தரிசனம் பெற்றனர்.
  • குடமுழுக்கையொட்டி மாவட்டம் நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவை தமிழகத்தில் இருந்து ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு சாமியின் தரிசனம் பெற்றனர். இந்தியாவிலேயே 29 பாரம்பரிய சின்னங்களில் தஞ்சை பெரிய கோவிலும் இருக்கிறது. இக்கோவிலில் 8-வது கால யாக பூஜையுடன் காலை 4.30 மணிக்கு குடமுழுக்கு திருவிழா தொடங்கியது. இதையடுத்து காலை 7 மணியளவில் பூர்ணாஹீதி, தீபாராதனை மற்றும் யாத்ரா தானம் நடைபெற்றது. பின்னர் காலை 7.25 மணியளவில் திருக்கலசங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் கோபுரத்தின் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டன.

இதையடுத்து மந்திரங்கள் ஓதப்பட்டு, ராஜகோபுரத்தின் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டடு, குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் கோவிலின் அனைத்து இடங்களிலும் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மந்திரங்கள் ஓதப்பட்டது. இதனிடையே கலசத்தில் புனிதநீர் ஊற்றுமோது கோவிலை சுற்றியிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் நமசிவாய என கூச்சலிட்டு பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதோடு, தீர்த்த நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. குறிப்பாக குடமுழுக்கின் போது கோபுரத்தின் மேலே கருடபிரான் வட்டமிட்டது. இதனை பார்த்து பக்தர்கள் கருடனை வழிபட்டனர். ராஜகோபுரத்தை தொடர்ந்து விநாயகர், முருகன், பெரியநாயகி, அம்மன், வராகி, சண்டிகேஸ்வரர் விமானங்களுக்கு குடமுழுக்கு நடந்தது.

இந்நிலையில், தஞ்சை பெரிய குடமுழுக்கையொட்டி மாவட்டம் நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது. மக்களின் வசதிக்காக தாற்காலிய பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழர் கட்டடக் கலை பெருமையை உலகுக்கு கூறும் தஞ்சை கோவில் குடமுழுக்கையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல சிறப்பம்சங்கள் நடைபெறவுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago