VCK Leader Thirumavalavan [File Image]
சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், நாளை எனது பிறந்தநாள் என்பதால் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றேன். தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இதில், விவசாய கூலியை ரூ.800 ஆக உயர்த்தி தர வேண்டும்.
கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்படும் கூலியை போன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகையை அனைத்து பெண்களும் பெறக்கூடிய வகையில் வரையறைகளை தளர்த்த வேண்டும். பள்ளிகளை மேம்படுத்துவதோடு ஆசியர்கள் பற்றாக்குறையை மற்றும் நியமனங்களை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அனைத்து மருத்துவமனைகளிலும் கண் சிகிச்சை பிரிவுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாங்குநேரி மாணவரின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று வீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியின் பெயரால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரத்தில் இந்த கொடுமை தொடர்ந்து நடந்து வருவதால், சாதி பிரச்சனைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும். நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். மனநல ஆலோசனை வழங்கும் மையங்களை கூடுதலாக உருவாக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன் என கூறினார்.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…