அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை!

Published by
பாலா கலியமூர்த்தி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் (54) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடலை கைப்பற்றிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனது வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் பார்த்திபன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது 2 சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரிமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பார்த்திபனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது பார்த்திபனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சமைத்து இடத்துக்கு வந்த காவல்துறை பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், பார்த்திபன் செம்மரம் கடத்தல் வழக்கில் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

6 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

37 minutes ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

1 hour ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

2 hours ago

தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…

2 hours ago

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?

சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…

2 hours ago