அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி!

Published by
Rebekal

வருகிற மாட்டுப்பொங்கல் தினத்தன்று அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் அடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரையிலும் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனவும், ஏழு நாட்களுக்கு முன்பதாகவே நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய வீரர்களுக்கு முன்பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் குறைந்த பட்சம் 300 மாடுபிடி வீரர்கள் வரையில் பங்கேற்கவும், சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வீரர்கள் களம் இறங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கூடிய மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை, காளைகளுக்கான முன்பதிவு போன்றவை நடத்துவதற்கான தேதி குறித்து விரைவில் முடிவு செய்ய விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

9 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago