வேல் யாத்திரையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.? விளக்கமளித்த எல்.முருகன் .!

Published by
Ragi

வேல் யாத்திரையால் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் தங்களுக்காக வந்தது என்று எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.

பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல்யாத்திரை நடைபெறும் என்று அறிவித்த நிலையில் ,அதற்கு தமிழக அரசு தடை விதித்தது . ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி தமிழக அரசின் தடையை மீறி வேல்யாத்திரை நடத்தி திருத்தணியில் வைத்து போலீசார் கைது செய்து விட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர் .

மேலும் இரண்டாவது தினமாக நேற்றைய தினமும் தடையை மீறி கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தினர் . வேல் யாத்திரையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி அவ்விடத்தில் இருந்து நகர முடியாமல் அரை மணியாக ஒரே இடத்தில் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து வேல்யாத்திரையில் கலந்து கொண்ட பாஜக தலைவர் எல்.முருகன் ,  கணேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் திருவொற்றியூரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்றும் எல்.முருகன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து தொடங்கியுள்ளனர் . அப்போது செய்திகளை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரையானது செங்கல்பட்டு மாவட்டத்தில் எனது தலைமையிலும், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து ஆம்புலன்ஸ் விவகாரம் குறித்து பேசிய எல்.முருகன் , அந்த ஆம்புலன்ஸ் தங்களுக்காக வந்தது என்றும், அது எங்களது ஆம்புலன்ஸ் என்றும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

5 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

6 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago