[Image Source : Twitter/@CMOTamilnadu]
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இதன்பின் பேசிய முதலவர், அமெரிக்காவும் தமிழ்நாடும் வலுவான பொருளாதார உறவை பல ஆண்டுகளாக கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 400க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல்வேறு புதிய அமெரிக்க நிறுவனங்களும் அண்மையில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன.
அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், இந்தியாவின் முதல் 3 தொழில் மயமான மாநிலங்களுக்குள் தமிழ்நாடும் ஒன்று என தெரிவித்தார். தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக ஆசியாவிலேயே முதல் 3 இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் நோக்கம் என்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா ஒரு கூட்டு நாடாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…