PMK Leader Anbumani Ramadoss [Image source : EPS]
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி 35 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை விழாவாக நடத்த கடலூரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டம் நாளை நெய்வேலி அருகே வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு அனுமதி கேட்டு கடலூர் மாவட்ட காவல்துறையிடம் பாமக கோரிக்கை வைத்து இருந்து. ஏற்கனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே பாமக போராட்டம் நடத்தி அதன் பின்னர் அது வன்முறையாக மாறிய காரணத்தால், நெய்வேலி டிஎஸ்பி பாமக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.
இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் பேருந்து நிலைய சந்திப்புக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், கட்சி கூட்டத்தை நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும், அதில் காவல்துறை அச்சத்தை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்க முடியாது என்றும். இதனால், கடலூரில் பாமக கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் வேறு மாவட்டங்களில் வேண்டுமென்றால் காவல்துறை அனுமதியுடன் நடத்த அனுமதி என்றும் உத்தரவிட்டது. கடலூரை தவிர்த்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொள்ளவும் உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து மேல்முறையீட்டிய செய்யவுள்ளதாகவும், கடலூர் மாவட்டத்திலேயே பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை சட்ட போராட்டம் மூலம் வென்றெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…