சிவகங்கை மாவட்டத்தில் புகழ் பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் நேற்றுஆய்வு செய்தாா். அப்போது மஞ்சுவிரட்டு திடல், பாா்வையாளா் மாடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அமைச்சா் பாா்வையிட்டாா்.
இதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிராமணம்பட்டி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் பெரியகருப்பன் திடீரென ஆய்வு செய்தார். அங்கு எழுத்த எழுதப்பட்டிருந்த திட்ட மதிப்பீடு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த திட்ட மதிப்பீடு பலகையில் “ஊரக வளர்ச்சி”என்பதற்கு பதிலாக “ஊராக வளர்ச்சி” என்றும், “உள்ளாட்சி” என்பதற்கு பதிலாக “ஊள்ளச்சி ” என்றும், “மானியம் ” என்பதற்கு பதிலாக மணியம் என எழுதப்பட்டிருந்தது.
ஒரே நாளில் அரசுப் பேருந்துகளில் 2,17,030 பேர் பயணம் ..!
இதை பார்த்த அமைச்சர் யார் இவ்வளவு பிழையுடன் எழுதியது என ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து கேட்டார். அப்போது ஒப்பந்தக்காரர் தான் இவ்வளவு பிழையுடன் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உடனே அமைச்சர் எவனா இருந்தாலும் கட்டி வையுங்கள் என கோபமாக பேசினார்.பின்னர், இந்த திட்ட மதிப்பீடு பலகையை மாற்றி எழுதி போட்டோ அனுப்புங்கள் என கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…