BJP State President Annamalai [Image source : The Hindu]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பலவித கருத்து மோதல் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றி பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான், அதை திசை திருப்பவே சனாதனத்தைப் பற்றி பாஜக பேசி கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஒரு அமைச்சர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறோம்.
உங்கள் ஆட்சியில் பதவியில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போர்ட்ஃபோலியோ இல்லாத உங்கள் அமைச்சர் ஒருவர், கேஷ் ஃபார் ஜாப் மோசடிக்காக சிறையில் இருக்கிறார்.
உங்கள் மகனும், உங்கள் கட்சிக்காரர்களும் இந்து தர்மத்தின் மீது நடத்தும் தாக்குதல், மேற்சொன்ன மோசடிகளைத் திசைதிருப்பும் செயலாகும். மேலும், உங்கள் கையில் இருக்கும் ஒரு காகிதத்தை நம்பி, சிஏஜி அறிக்கையை தவறாக மேற்கோள் காட்டி, உங்களை சங்கடப்படுத்துவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…