BJP State President Annamalai [Image source : The Hindu]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பலவித கருத்து மோதல் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றி பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான், அதை திசை திருப்பவே சனாதனத்தைப் பற்றி பாஜக பேசி கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஒரு அமைச்சர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறோம்.
உங்கள் ஆட்சியில் பதவியில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போர்ட்ஃபோலியோ இல்லாத உங்கள் அமைச்சர் ஒருவர், கேஷ் ஃபார் ஜாப் மோசடிக்காக சிறையில் இருக்கிறார்.
உங்கள் மகனும், உங்கள் கட்சிக்காரர்களும் இந்து தர்மத்தின் மீது நடத்தும் தாக்குதல், மேற்சொன்ன மோசடிகளைத் திசைதிருப்பும் செயலாகும். மேலும், உங்கள் கையில் இருக்கும் ஒரு காகிதத்தை நம்பி, சிஏஜி அறிக்கையை தவறாக மேற்கோள் காட்டி, உங்களை சங்கடப்படுத்துவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…