[Representative Image]
பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் கைது.
தமிழகத்தில் நெல்லை, மதுரை, சிவகங்கை, திருவாரூர், தேவகோட்டை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனமானது, தங்கள் பயனர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு பணம் இரட்டிப்பாகும் என கூறி சுமார் 70 ஆயிரம் பேரிடம் முகவர்கள் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி பணம் வசூல் செய்துள்ளது.
இதன் பின்னர் பணத்தை கட்டியவர்கள் தங்கள் பணம் திரும்ப கொடுக்கப்படாததை அடுத்து, பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் 100-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறை சில மாதங்களுக்கு முன் தென் மாவட்டத்தில் 17 இடஙக்ளில் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.22கோடி வரையில் மோசடி நடந்ததாக கூறப்பட்டது.
நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள், முகவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் பத்மநாபன். மதுரையை சேர்ந்த பத்மநாபனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, கிளை இயக்குநர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமை இயக்குநர்களை போலீஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…