தமிழகத்தில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Published by
பாலா கலியமூர்த்தி

மலர்விழி, தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

தமிழகத்தில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் 5 இடங்கள், புதுக்கோட்டையில் 3 இடங்களில், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் தலா ஒன்று என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இதில், குறிப்பாக தருமபுரி முன்னாள் ஆட்சியராக இருந்த மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலர்விழி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலர்விழி, தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது.  மேலும், தனியார் நிறுவன உரிமையாளர்கள் தாகிர் உசேன், வீரய்யா பழனிவேல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

26 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

5 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago