தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான மருத்துவ கல்லூரிகள உள்ளன.
அதில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பி. வி. எஸ். சி., – ஏ. ஹெச்), உணவு கோழியின மற்று பால்வளத்துறை தொழில்நுட்ப படப்பிடிப்பு(பி. டெக்) ஆகிய பாட பிரிவுகளில் இணைவதற்கான பிளஸ் டூ படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24முதல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணி முதல் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 28ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…