மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன்(வயது 89),கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின்னர் ,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில்,அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நேற்று உயிரிழந்தார்.இவர் அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.வெங்கடசாமி என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து,மறைந்த அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் அவர்களின் இறுதி சடங்குகள் இன்று காலை மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி இறுதி சடங்குகள் நடைபெறும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…