FishermanArrest conf [Image- Representative]
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக்கண்டித்து நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்வதாக தகவல்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார்கள், மீனவர்களின் படகுகளும் பிடித்து வைக்கப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது.
இதனைக்கண்டித்து மீனவர் நலச்சங்கங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாபெரும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதையும்,தாக்கப்படுவதையும் கண்டித்து மீனவர் சங்க மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின், இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர் நலச்சங்க பிரதிநிதிகள் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…