சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 2016-21-ம் காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர், அமைச்சராக இருந்தபோது பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021 அக்டோபர் மாதம் விஜயபாஸ்கர் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரொக்கப் பணம், தங்க நகைகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2021 அக்டோபர் 17-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், அவரின் மனைவி ரம்யா பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் 22-ம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  விஜயபாஸ்கர், அவரின் மனைவி மீதான 216 பக்க குற்றப்பத்திரிகையை , லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கடந்த 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, விஜயபாஸ்கரும், அவரின் மனைவி ரம்யாவும் இன்று மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் உத்தரவை அடுத்து, புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர், மற்றும் அவரின் மனைவி ரம்யா இன்று ஆஜரான நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 26ம் தேதி விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, 2013-21 வரை 8 ஆண்டுகளில் வருமானத்தை விட ரூ.35.79 கோடி கூடுதலாக சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

38 seconds ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

39 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

2 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago