பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் – 6 பேர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

திருநெல்வேலியில் மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதி பெயரைகேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக தச்சநல்லூரைச் சேர்ந்த 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.  இந்த நிலையில், கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி பணம் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.

பேருந்துகளில் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது.! போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு.!

கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த பட்டியலின இளைஞர்கள் மனோஜ், மாரியப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், 6 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி சாதி பெயரை கேட்டு துன்புறுத்தினர். சட்டையை கழற்றி எங்கள் மீது சிறுநீர் கழித்தனர். கஞ்சா போதையில் இருந்தவர்கள் எங்களை கடுமையாக தாக்கினர். பின்னர் தப்பித்து ஆடை இல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்தோம். ரூ.5,000 பணம், செல்போன், வெள்ளி சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றனர் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி
Tags: #Nellai

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

2 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago