வருமான வரித்துறையின் சோதனை; சார்பதிவாளர் அலுவலகங்களில் 3000 கோடி கணக்கில் இல்லை.!

Published by
Muthu Kumar

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறையின் சோதனையில் 3000 கோடி கணக்கில் வரவில்லை என தகவல்.

தமிழகத்தின் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. நிலமதிப்பீடுகளை குறைவாகக் கணக்கு காட்டி பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை, திருச்சி உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சென்னையின் செங்குன்றம் மற்றும் திருச்சியின் உறையூர் பதிவு அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாமல் 3000 கோடி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்யப்பட்டதில், 2000 கோடிக்கு கணக்கில் வரவில்லை எனவும், இதேபோல் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1000 கோடி கணக்கில் காட்டப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறையினர் கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட கணக்குகளை சரிபார்க்கும் போது, 3000 கோடி கணக்கில் வராதது கண்டறியப்பட்டுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

30 minutes ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

56 minutes ago

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…

1 hour ago

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

11 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

12 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

13 hours ago