ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர்.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.இரவு, பகலாக 80 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வந்தது.இதனையடுத்து பணிகள் 2 மணி அளவில் நிறுத்தப்பட்டது. அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.ஆழ்துளை கிணற்றில் இருந்து நேற்று இரவு 10.30 மணியில் இருந்தே உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியது . 80 மணி நேரமாக நடைபெற்ற முயற்சி தோல்வி அடைந்ததாகவும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சில மணி நேரங்களில் சிறுவனின் இறப்பு குறித்து முறையான அறிவிப்பு என்றும் தெரிவித்தார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…