திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அழகரை கல்லுப்பட்டி வடக்கு தெருவை சார்ந்த ரெங்கர் இவர் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் இரவு தனது 15 மாத குழந்தையை கையில் வைத்து கொண்டு ஆனந்தன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது ரெங்கரின் உறவினர் செந்தில் என்பவர் ஆனந்தன் சட்டையில் இருந்த 70 ரூபாய் பணத்தை ஆனந்தனிடம் கேட்காமல் எடுத்தார். இதை தட்டி கேட்ட ரெங்கருக்கும் , செந்திலுக்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரம் அடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் ரெங்கர் கையில் வைத்து இருந்த அவரது 15 மாத நித்தீஸ்வரன் என்ற குழந்தை மீதும் அடி விழுந்தது.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த இருவரையும் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் நித்தீஸ்வரனுக்கு மேல் சிகிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் அங்கு சிகிக்சை பலன் இன்றி நித்தீஸ்வரன் இறந்தார்.இது குறித்து தொட்டியம் போலீசார் செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…