புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள பகுதி மாங்காடை அடுத்த கோவூரில் அணு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் ஆவார்.இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.
மேலும் சரியாக பைனான்ஸ் காட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் திரும்ப வீடு திரும்பவில்லை.
இதன் காரணமாக பெற்றோர் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் யுவராஜ் கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் நேற்று காலை சரமாரியாக வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் யுவராஜின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் யுவராஜுக்கு திருமணமாகி இருப்பதாகவும் அவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இதன் காரணமாக அவருக்கும், அவரது மனைவியின் உறவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதன் காரணமாக யுவராஜின் மனைவியின் உறவினர்கள் அவரை கொலை செய்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகினறன.
மேலும் யுவராஜ் கொலை செய்யப்பட்ட இடத்தில் காலி மது பாட்டில்கள் கிடந்ததால், இரவு மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பாணியிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…