பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் அதிகாரி

Published by
லீனா

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும்  பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 88,957 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் விவிபேட் பொருத்தப்பட்டுள்ளது என்றும், வெப்கேமரா மூலம், 50 சதவீத வாக்கு சாவடிகள் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கொரோனா நோயாளி வாக்களிக்க பிபிஇ கிட் கொடுக்கப்படும்  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் மாலை 6 மணிக்குப் பிறகு கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்றும், உடல் வெப்ப நிலை அதிகமாக காணப்பட்டால் அவர்கள் மாலை 6 மணிக்குப் பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும்  பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு வீடு திரும்ப வசதியாக இலவச கார் வசதியை அளிக்க உபர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சேவையை வழங்குகிறது.

Published by
லீனா

Recent Posts

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! 

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

14 minutes ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

57 minutes ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

4 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

5 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

5 hours ago