மதுரையில் உள்ள பிரபல ரமணா மெஸ் மூன்று கிளைகளைக் கொண்டது. இதன் உரிமையாளர் செந்தில். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இவரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியது. இதனால் கோபாலகிருஷ்ணன் கடத்தியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அவரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
செந்திலுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை அதனால் ஒரு ஜோதிடர் அதிக மாடுகளை வாங்கி வளர்த்தால் பணம் பெருகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் செந்தில் 450 மாடுகளை வாங்கி பண்ணை வைத்ததாக தெரிகிறது. அதில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதால் கடன் பிரச்சனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை சமாளிக்க கோபாலகிருஷ்ணனிடம் 5 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு தனது மெஸ்ஸில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பேசியபடி பணமும் தராமல் செந்தில் தலைமறைவாகி விட்டதாக கோபாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
மேலும் மெஸ்ஸில் உள்ள 120 ஊழியர்களின் பெயரில் தலா 2 லட்சம் வங்கி கடன் வாங்கியதாகவும் அதனை செலுத்தாமல் தலை மாறிவிட்டதாகவும் மெஸ் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…