“முதல்வர், துணை முதல்வர் இருவரும் ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள்!” – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published by
Surya

முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும், அவர்கள் இருவரும் ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து, கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனவும், அவர்கள் காலி பானையாக உள்ளதாக தெரிவித்தார். வரும் 7ம் தேதி ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள். முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும், அவர்கள் இருவரும் ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என கூறினார்.

அதுமட்டுமின்றி, தலைமை அறிவிக்கும் கருத்துக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் எனவும், தனி ஒருவர் சொல்லும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது. கிராம சபை கூட்டம் நடத்துவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

1 hour ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

2 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

2 hours ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

2 hours ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

3 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

3 hours ago