#Breaking: தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் இன்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8,718 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று 83 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,66,687 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 11,788 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 716 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 716 பேரில் ஆண்கள் 427 பேர், பெண்கள் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, கொரோனா வார்டில் 6,520 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 36, செங்கல்பட்டில் 35, பெரம்பலூர் மற்றும் திருவள்ளூரில் தலா 27 என கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 8,718 பேரில் 5,848 பேர் ஆண்களும், 2,867 பேர் பெண்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

20 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

21 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

23 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

23 hours ago