நடிகர் விவேக் மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
தமிழ் திரையுலகின் பிரபல நகைசுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம், 17-ம் தேதி மரணமடைந்தார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், அவரது மரணம் பல சர்ச்சைகளுக்குள்ளானது. மேலும், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாக தான் காலமானார் என்றும் பலர் கூறியிருந்தனர்.
இதனையடுத்து சுகாதார்த்தத்துறை சார்பில், தடுப்பூசிக்கும், விவேக் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் இதுதொடர்பான புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாகவே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவருடைய மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே மிக விரைவில், இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு நோட்டிஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு சுகாதாரத்துறை அளிக்கும் பதிலை அடிப்படையாக கொண்டு இதன் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…