தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், பிரதமருக்கு முதல்வர் இக்கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவை உள்ள நிலையில் 50,000 மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கிறது. தடையற்ற மின் வினியோகத்தை பராமரிக்க அதிக விலை தந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
நிலக்கரி எடுத்துச் செல்ல 22 ரேக்குகள் தேவைப்படும் நிலையில் 14 ரேக்குகள் மட்டுமே வழங்கப் படுகின்றன. 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத் தக்க அளவை எட்டியுள்ளது. 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கினால் மட்டுமே தடையில்லா மின் வினியோகத்தை பராமரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…