தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 580 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 4,829 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 316 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கும் மொத்தம் 2,644 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 37 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,547 பேர் மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 14,195 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,02,436 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 3,822 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்து இன்று அதிகம் பாதிக்கப்பட்டதில் திருவள்ளூரில் 63, விழுப்புரத்தில் 45, பெரம்பலூரில் 33, கடலூரில் 32 என கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…