தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றுள்ள மாநகராட்சி மேயர்கள் பதவி ஏற்று வருகின்றன. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகளில் மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாகர்கோவில், ஓசூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் தஞ்சை ஆகிய மாநகராட்சிகளுக்கு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
நாகர்கோவிலில் திமுக, பாஜக இடையே நடந்த பலப்பரீட்சையில் திமுகவின் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார். ஓசூர், தஞ்சை மாநகராட்சியில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இதுபோன்று காஞ்சிபுரம், கடலூரில் திமுகவின் அதிகாரபூர்வ மேயர் வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தியாளர்கள் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், திமுக வேட்பாளர்களான காஞ்சிபுரம் மகாலட்சுமி, கடலூர் சுந்தரி ராஜா வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் வெற்றி மற்றும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மேயர்கள்:
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…