#BREAKING : ஈபிஎஸ் – ஓபிஎஸ் பிரதமரிடம் பேசியது என்ன….? விளக்கமளித்த ஈபிஎஸ்…!

Published by
லீனா

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய விடயங்கள் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், இவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து  பேசியுனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பி துறை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு  எடப்பாடி பழனிசாமி அவர்கள்  பேட்டியளித்துள்ளார். அப்போது பிரதமர் மோடியிடம் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக விளக்கி கூறினார். அவர் கூறியதாவது,

  • தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம்.
  • சட்ட பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம்.
  • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தினோம்.
  • தமிழகத்தில் நீர் பற்றாக்குறையை போக்கும் வண்ணம், காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தோம்.
  • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம்.

அதிமுக தலைமை  

செய்தியாளர்கள் அதிமுக தலைமை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதிமுக தலைமை மீது தொண்டர்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் கட்சியை விட்டு சென்றுள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும் கொண்டுவரவில்லை என்றால் நல்லது தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளிக்காமல், ஈபிஎஸ் நன்றி எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

Published by
லீனா
Tags: #EPS#Modi

Recent Posts

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

24 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

47 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

17 hours ago