கொரோனாவிற்கான எந்த அறிகுறி இல்லையென்றாலும், ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது.
சென்னை தி.நகரில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முகர்ந்து பார்க்கும் வாசனை இல்லாமல் இருப்பது, வயிற்று போக்கு, கடுமையான உடற்சோர்வு போன்ற பிரச்னை இருந்தால், அதிகாரிகள் உடனடியாக பதிவு செய்து, அப்படிப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம்.
கொரோனாவிற்கான எந்த அறிகுறி இல்லையென்றாலும், ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு, ஆக்சினேட்டர் கருவியை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டும். அப்படி சோதனை மேற்கொள்ளும் போது இரத்தத்தில், ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்கலாம்.
அந்த கருவி 95-க்கு கீழ் காட்டினால், கொஞ்சம் கவனமாக தான் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் உள்ள காய்ச்சல் முகாம்களுக்கு சென்று, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வீடுகள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தாலே, தொற்று பாதிப்பின் தீவிரம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…