#BREAKING: சிறுமியின் தலை துண்டிப்பு – இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம்.

சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவரை ஆத்தூர் போலீஸ் கைது செய்திருந்தது.

பாலியல் தொல்லையை வீட்டில் சொல்ல போவதாக கூறிய சிறுமியின் தலை துண்டிக்கப்பட்டு, தினேஷ்குமார் என்பவர் கொலை செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையானது சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. குற்றவாளி 100% குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில்,  குற்றவாளி தினேஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு, சேலத்தில் விதிக்கப்பட்ட முதல் தூக்கு தண்டனை இதுவாகும். குற்றவாளி தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

5 minutes ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

11 minutes ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

58 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

1 hour ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

2 hours ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago