#BREAKING: சிறுமியின் தலை துண்டிப்பு – இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம்.

சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவரை ஆத்தூர் போலீஸ் கைது செய்திருந்தது.

பாலியல் தொல்லையை வீட்டில் சொல்ல போவதாக கூறிய சிறுமியின் தலை துண்டிக்கப்பட்டு, தினேஷ்குமார் என்பவர் கொலை செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையானது சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. குற்றவாளி 100% குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில்,  குற்றவாளி தினேஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு, சேலத்தில் விதிக்கப்பட்ட முதல் தூக்கு தண்டனை இதுவாகும். குற்றவாளி தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

15 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

28 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago