gold [Imagesource : Thehindu]
கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்ட இந்திய கடற்படையினர்.
இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கடலோரக் காவல்படை படகில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற நிலையில், மண்டபம் எதிரே மன்னார் வளைகுடா பகுதி மணலி தீவு அருகே ரோந்து படகை பார்த்ததும் பதிவு எண் இல்லாத பைபர் படகில் இருந்த 3 பேர் படகை நிறுத்தாமல் சென்றனர்.
அதிகாரிகளை பார்த்தவுடன் அவர்கள் தங்கத்தை கடலில் தூக்கி வீசியதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் நீச்சல் தெரிந்தவர்களை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 2-வது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், 10 கிலோ தங்கம் இருந்த பார்சலை இந்திய கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு தங்கத்தின் மதிப்பு குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பார்சல் மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…