gold [Imagesource : Thehindu]
கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்ட இந்திய கடற்படையினர்.
இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கடலோரக் காவல்படை படகில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற நிலையில், மண்டபம் எதிரே மன்னார் வளைகுடா பகுதி மணலி தீவு அருகே ரோந்து படகை பார்த்ததும் பதிவு எண் இல்லாத பைபர் படகில் இருந்த 3 பேர் படகை நிறுத்தாமல் சென்றனர்.
அதிகாரிகளை பார்த்தவுடன் அவர்கள் தங்கத்தை கடலில் தூக்கி வீசியதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் நீச்சல் தெரிந்தவர்களை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 2-வது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், 10 கிலோ தங்கம் இருந்த பார்சலை இந்திய கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு தங்கத்தின் மதிப்பு குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பார்சல் மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…