சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.38,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ரஷ்யா – உக்ரைன் இடையேயான தொடர் போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் அதிகரித்து வந்தது. இதன்பின் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, கடந்த வார தொடக்கத்தில் இருந்து சற்று சரிந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,608க்கும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,826க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோன்று சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.18 சரிந்து, ரூ.5225.00 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ. 41800.00 ஆகவும் வர்த்தகமானது.
இந்த நிலையில், தங்கம் விலை மேலும் இன்று குறைந்து காணப்படுகிறது. அதாவது, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,796 ஆக வர்த்தகமாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து, ரூ.72.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் இன்று 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5195 ஆகவும், 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.41560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், இந்த நிலை தொடருமா அல்லது மீண்டும் விலை அதிகரிக்கக்கூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆனால், தங்கம் விலை தற்போது குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு ஓர் நற்செய்தியாகும் என்பது குறிப்பிடப்படுகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…