#BREAKING: புதுச்சேரி பேரவையில் ஆளுநர் உரை நிறுத்திவைப்பு.!

Published by
murugan

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கிரண்பேடி வராததால் ஆளுநர் உரை நிறுத்திவைப்பு.

இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற இருந்தது. இந்த பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காததால், புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார். அதில், கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  இன்று காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்க இருந்த கிரண்பேடி வராததால் 15 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், பின்னர் 09.45 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. இதையடுத்து,  சபாநாயகர்  சிவக்கொழுந்து ஆளுநர் உரை இன்றி பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தினார்.

அவர்கள் ஒப்புதல் அளித்ததும், ஆளுநர் உரை நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், சிறிது நேரம் சிவக்கொழுந்து உரையாற்றிய நிலையில் அவையை 12.05 வரை ஒத்திவைத்தார். மேலும், குறிப்பிட்டபடி மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரியில் ஆளுநர் பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago