புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கிரண்பேடி வராததால் ஆளுநர் உரை நிறுத்திவைப்பு.
இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற இருந்தது. இந்த பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காததால், புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார். அதில், கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்க இருந்த கிரண்பேடி வராததால் 15 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், பின்னர் 09.45 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. இதையடுத்து, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆளுநர் உரை இன்றி பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தினார்.
அவர்கள் ஒப்புதல் அளித்ததும், ஆளுநர் உரை நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், சிறிது நேரம் சிவக்கொழுந்து உரையாற்றிய நிலையில் அவையை 12.05 வரை ஒத்திவைத்தார். மேலும், குறிப்பிட்டபடி மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரியில் ஆளுநர் பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…