சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து 39 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என புகார் எழுந்த நிலையில் ,டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது.
தேர்வாணையம் நடத்திய விசாரணையில் , 99 பேர் இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்து முறைகேடு செய்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது.
இந்நிலையில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இன்று காலை முதல் 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த 12 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படை எஸ்.பிக்கள் அமைத்து தனித்தனியாக விசாரித்து வந்த நிலையில் 3 பேர் சிபிசிஐடி போலீசார் கைது செய்ததாகவும் ,கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…