TN IAS Transfer [Image-DT Next]
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராகவும், நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளராகவும், புதிய ஆணையராக உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தப்படியாக ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்படுவதாகவும், போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டும், சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டும், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டும் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…